Saturday, July 6, 2013

என்னை என்ன செய்ய போகிறாய் ...!




உன் பெயரை மட்டும்
கீதமாய் கேட்க வைத்தாய்..!
உன் நினைவினால்  மட்டும்
அமைதி காண வைத்தாய்..!
உன்னை தவிர
அனைத்தையும் மறக்க வைத்தாய்
இதற்கு மேலும் - என்னை
என்ன செய்ய போகிறாய் ...!

Friday, June 28, 2013

உன் நினைவுகள்..!


கவிதைகள்  
எழுத வார்த்தை தேடி 
எவையும் சிக்கவில்லை 
காரணம் 
என் மனம் - உன் 
நினைவுகளிலிருந்து
மீண்டால் தானே..! 


மரண தண்டனை..!



உன் விழியில் சிக்கிய 
நான் 
ஆயுள் கைதியாவேன் 
என்று எண்ணினேன் - ஆனால் 
நீயோ 
மரண தண்டனை 
விதித்தது 
ஏனோ..!


Thursday, June 27, 2013

நீ தரும் அவஸ்த்தை..!



அந்த 
அவஸ்த்தையை 
கூட தாங்கிக்  கொள்ள 
தயார் ஆகிவிட்டேன் 
நீ தருவதனால்..!


நம் காதல் பேசட்டும்..!



உன்னை 
சந்திக்கும் போதெல்லாம் 
நான் 
மௌனம் கொள்வது 
நம்மிடையே 
நம் காதல் 
பேசட்டும் என்று தான்..!