Friday, June 28, 2013

உன் நினைவுகள்..!


கவிதைகள்  
எழுத வார்த்தை தேடி 
எவையும் சிக்கவில்லை 
காரணம் 
என் மனம் - உன் 
நினைவுகளிலிருந்து
மீண்டால் தானே..! 


மரண தண்டனை..!



உன் விழியில் சிக்கிய 
நான் 
ஆயுள் கைதியாவேன் 
என்று எண்ணினேன் - ஆனால் 
நீயோ 
மரண தண்டனை 
விதித்தது 
ஏனோ..!


Thursday, June 27, 2013

நீ தரும் அவஸ்த்தை..!



அந்த 
அவஸ்த்தையை 
கூட தாங்கிக்  கொள்ள 
தயார் ஆகிவிட்டேன் 
நீ தருவதனால்..!


நம் காதல் பேசட்டும்..!



உன்னை 
சந்திக்கும் போதெல்லாம் 
நான் 
மௌனம் கொள்வது 
நம்மிடையே 
நம் காதல் 
பேசட்டும் என்று தான்..!


உன் ஸ்பரிசம்..!



பூக்களை 
காணும் போதெல்லாம் 
அதன் நறுமணத்தை 
உணர்கிறேனோ 
இல்லையோ - உன் 
ஸ்பரிசத்தை 
உணர்கிறேன்..!



என் மனம்..!



கடிகாரம் முள் 
போன்றது தான் 
என் மனமும் - உன்
நினைவுகளுடன் 
உன்னையை சுற்றுகிறது..! 



பாலைவனக் காதல்..!





பாலைவனத்தில் உள்ள  
ரோஜாவை போன்றது தான் 
என் மீதான -உன் காதல் 
என்று தெரிந்தும் 
உன்னை நேசிக்கிறேன்..!

மனம் இல்லையா..!

                                             
               



நான் பேச 
வேண்டுமென்று - உன் 
மொழிகளை தந்தாய்..!

நான் பார்க்க 
வேண்டும் என்று - உன் 
விழிகளை தந்தாய்..!

நான் எழ 
வேண்டும் என்று - உன் 
கரங்களை தந்தாய்..!

இவையாவையும் 
தந்த உனக்கு - நான் 
உயிர் வாழ 
வேண்டும் என்று உன் காதலை 
தர மனம் இல்லையா..! 

Wednesday, June 26, 2013

நான் என்ன குழந்தையா...!




நீ கிடைக்க மாட்டாய்
என்று தெரிந்தும் கூட
மனம் உன்னையே  கேட்கிறதே ...!





நிலவைக் காட்டிகுழந்தைக்கு - தாய்
சாதம் ஊட்டுவதுப் போல்
உன்னைக் காட்டியே - காதல்
என்னை வாழச் சொல்கிறது




அம்மாவின் மடியில் இருக்கும்
குழந்தையைப் போல் - மனம்
உன் மூச்சுக் காற்று உள்ள
இடத்தில் இருக்க விரும்பிகிறது





குழந்தையிடம்
விளையாட்டுப் பொருளை தராமல்
ஏமாற்றுவதைப் போல் - என்னையும்
உன் காதலை தராமல்
ஏமாற்றாதே....!


Tuesday, June 25, 2013

என் பாதை....!






 cute, girl, photography, road, sun - inspiring picture on Favim.com

செல்ல வேண்டிய பயணம் 
மிகத்தூரம் என்றாலும் 
விரைவிலே வந்து விடுகின்றது - மனம் 
உன் நினைவுகளுடன்  செல்வதால்..!


நான் செல்லும் 
பாதை எங்கும் 
நிரப்பிக் கொண்டே செல்கிறேன் 
உன் நினைவுகளை..!



தினமும் செல்லும்
பாதை தான்  என்றாலும்
புதிதாக உள்ளது - உன்னுடன்
செல்லும் போது..!

Monday, June 24, 2013

காதல்..!



காதல் ஒரு கனவு 
ரசனையுடன் காண்கிறேன் - நீ 
அதில் வருவதால்...!


காதல் ஒரு வலி
சுகமாய் அனுபவிக்கிறேன் -நீ  
தருவதால்..!


காதல் ஒரு சிலுவை 
இன்பமாய் சுமைக்கிறேன் - நீ 
என்னுள் இருப்பதால்..!


காதல் ஒரு கடல் 
ஆனந்தமாய் மூழ்குகிறேன் - உன்னில் 
மூழ்குவதால்..! 


காதல் ஒரு காடு 
தொலைந்து போகிறேன் - உன்னை 
அடைய போவதால்..!


காதல் ஒரூ  தீ 
எரிந்து  சாம்பாலகுகிறேன் - நீ 
எரிப்பதால்..!


காதல் ஒரு மரணம் 
தெரிந்தும் நேசிக்கிறேன் - அதை 
தருவது நீ என்பதால்..!



இவை  அனைத்துக்கும் 
ஒரே காரணம் - உன் 
மீதான "என் காதல்" 
என்பதால்...! 

நீ..!




உன் மனதை சிறை செய்ய நினைத்தேன்
பின்பு தான் தெரிந்தது - 
என் மனம் உன்னிடம் 
சிறைப் பட்டுள்ளது என்று ....!

தினமும் செல்லும்
பாதை தான் - என்றாலும் 
புதிதாக உள்ளது - உன்னுடன் 
செல்லும் போது  ........!

கோடைக் காற்றும் 
குளிருகிறது -அதில் 
 உன் மூச்சுக் காற்று
 இருப்பதால் ....!

ஊரெல்லாம் வாயடி பெண்
என்று பெயர் எடுத்த - நான்
உன் முன்னால் மட்டும்
ஊமை ஆகிவிடுகிறேன்....!