Wednesday, June 26, 2013

நான் என்ன குழந்தையா...!




நீ கிடைக்க மாட்டாய்
என்று தெரிந்தும் கூட
மனம் உன்னையே  கேட்கிறதே ...!





நிலவைக் காட்டிகுழந்தைக்கு - தாய்
சாதம் ஊட்டுவதுப் போல்
உன்னைக் காட்டியே - காதல்
என்னை வாழச் சொல்கிறது




அம்மாவின் மடியில் இருக்கும்
குழந்தையைப் போல் - மனம்
உன் மூச்சுக் காற்று உள்ள
இடத்தில் இருக்க விரும்பிகிறது





குழந்தையிடம்
விளையாட்டுப் பொருளை தராமல்
ஏமாற்றுவதைப் போல் - என்னையும்
உன் காதலை தராமல்
ஏமாற்றாதே....!


No comments:

Post a Comment