உன் மனதை சிறை செய்ய நினைத்தேன்
பின்பு தான் தெரிந்தது -
என் மனம் உன்னிடம்
சிறைப் பட்டுள்ளது என்று ....!
தினமும் செல்லும்
பாதை தான் - என்றாலும்
புதிதாக உள்ளது - உன்னுடன்
செல்லும் போது ........!
கோடைக் காற்றும்
குளிருகிறது -அதில்
உன் மூச்சுக் காற்று
இருப்பதால் ....!
ஊரெல்லாம் வாயடி பெண்
என்று பெயர் எடுத்த - நான்
உன் முன்னால் மட்டும்
ஊமை ஆகிவிடுகிறேன்....!
No comments:
Post a Comment