Monday, June 24, 2013

நீ..!




உன் மனதை சிறை செய்ய நினைத்தேன்
பின்பு தான் தெரிந்தது - 
என் மனம் உன்னிடம் 
சிறைப் பட்டுள்ளது என்று ....!

தினமும் செல்லும்
பாதை தான் - என்றாலும் 
புதிதாக உள்ளது - உன்னுடன் 
செல்லும் போது  ........!

கோடைக் காற்றும் 
குளிருகிறது -அதில் 
 உன் மூச்சுக் காற்று
 இருப்பதால் ....!

ஊரெல்லாம் வாயடி பெண்
என்று பெயர் எடுத்த - நான்
உன் முன்னால் மட்டும்
ஊமை ஆகிவிடுகிறேன்....!

No comments:

Post a Comment